தளமுகப்பு பதிவுகள் என்னை-தெரியுமா? தொடுப்புகள் தரவிறக்கம் மென்-நூல்கள்   நிலாமுற்றம் தள-செய்திகள்  
நிலா முற்றம்
விரைவில் உங்களுக்காக, உங்களுடன்...




20.6.09

கன்னியாகுமரி பாகம் (4)

கன்னியாகுமரி பாகம் (4)


எனது வலைப்பூவை சற்று விசாலமானமுறையில் அறிமுகப்படுத்த முயற்சித்தேன், அதற்காக இணைய முகவரி பதிவு செய்துள்ளேன். (www.ragubathi.in)
அதன் பக்கங்களை அழகுபடுத்தும் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க (தற்போது முடிவுறும் நிலையில் உள்ளது)




அதன் இடைஇடையே சில பணி நிமிர்தமான தடைகள், குடும்பத்தில் மங்கல நிகழ்சிகள் என வலை தகவல்களை விட்டு வெளியே வந்துவிட்டதாய்...ஒரு சின்னவருத்தம்... ஆனால் குடும்பத்தில் மிக மகிழ்சியான நிகழ்வு, எனது தங்கையின் திருமணம், விட்டுபோகும் நிலையிலிருந்த உறவுகள் புதுப்பிக்கபட்ட மகிழ்ச்சி பல முகங்களில்...
திருமண கனவுகளில் இருந்த இரு மனங்கள் இணைந்தன, எனக்கும் மகிழ்ச்சி தான்,





ஆனால் எனக்காக திறக்க உள்ள இல்லற சிறைகம்பிகள் வெகு அருகில் தெரிகிறதே...சிங்கார சென்னையை தனியாக சுற்றிக்கொண்டு அவ்வப்போது (கன்னியா)குமரியை வலம்வந்தும். எனக்கும், பணிக்கும், வலைக்கும் மட்டுமே நேரம் செலவழித்த என் மீதமுள்ளநேரத்தை பங்குகொள்ள யார் வருவாரோ...! காலம் சொல்லட்டும், என் தந்தை முடிவு செய்யட்டும். சரி நாம், நம் கதைக்கு வருவோம்...

கன்னியாகுமரி நான்காம் பகுதியில் குமரியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்ப்போம்,

1.விவேகானந்தர் பாறை
2.திருவள்ளுவர் சிலை
3.காந்தி நினைவு மண்டபம்
4.காமராசர் நினைவு மண்டபம்
5.குமரி காட்சி கோபுரம்
6.தமிழ் அன்னை பூங்கா
7.நடமாடும் துறவிகள் காட்சி அரங்கம்
8.பே-வாட்ச் (உல்லாச பூங்கா)

மற்றும் பல அதிசயிக்கும் இடங்கள் உள்ளன.

இந்த சுற்றுலாத்தலங்களை பற்றி விரிவாக பார்க்கும் முன் குமரிக்கு எழில்கூட்டும் நிகழ்வுகளை தெரிந்துகொள்வோம்.

கன்னியாகுமரி என்றதும் நினைவுக்கு வருவது முக்கடலும் சூரியனும் தான்.வங்கத்தில் எழுந்து தங்கமென தகதகத்து அரபிக்கடலில் விழுவதுதான்...

சூரியன் தான் அது. அதிகாலை வங்ககடலில் எழுந்த்து பகல் முழுதும் சுற்றி மலையில் அரபிக்கடலில் அஸ்தமனம் ஆவதுதான். (அஸ்த்தமனம் எல்லாம் நிரந்தரமல்ல... மேற்கில் மறைந்தால் கிழக்கில் முளைக்கும் - பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது)இதை இங்கே காணலாம்...


மூலம்: கண்டதும் கேட்டதும்.

மேலும் பல‌ செய்திகள் எங்கள் தென்குமரியை பற்றி பின் வரும் பதிவுகளில்‍...
வலைபூ மேலும் பூக்கும்...

கருத்துகள் இல்லை: